Friday, November 8, 2013

என் தேடல் நீ


தென்றலுக்கும் குளிரூட்டும் உந்தன் மூச்சு,
குயில் ராகம் கெஞ்சும் உன் பேச்சு;

கயல் தோற்கும் உன் விழியில்,
நிலவும் வெட்கப்படும் உன் வழியில்;

காந்தம் உன் பார்வையிலே,
பந்தம் ஒன்று நீ வளர்த்தாய்;

பூவை நீ சூடவோ,
பூக்கள் உனை சூடுமோ;

புல் தரையில் நீ நடந்தால்,
புலிகளும் பசுவாகும்;

உன் விரல்கள் வருடுகையில்,
மழலை விரல் மென்மை மறந்திடுதே;

உன் நிழல் வீழ்கையில் மண்ணில்,
வீழ்கிறதே என் மனது.


No comments:

Post a Comment