Friday, October 25, 2013

தமிழே என் மூச்சே


தொன் மொழிகளுள் முதன் மொழி,
எம் தாய் மொழி;

வேற்று மொழியின் துணையில்லாமல் துலங்கும்,
இது தமிழ் மொழி;

இலக்கணங்கள் அதன் அரண்களாகும்,
பல் இலக்கியங்கள் அதன் தோரணங்கள்;

இவள் சக மொழிகள் இடம் தெரியவில்லை,
வானளாவும் இவள் புகழ்ச்சி இன்னும்;

பெண் வன் கொடுமை எதிர்க்க,
குரல் தந்தாள் எம் பாரதிக்கு;

சாதி வன்கொடுமை ஒழிக்க,
கட்டுரைத்தாள் நம் பெரியார்கு;

இரண்டடியாகிய உலக போதுமறைக்கு,
உரு கொடுத்தாள் வள்ளுவரின்பால்;

சுதந்திர கோஷம் முழக்க,
துணை நின்றாய் வீரத்தாயாக;

என்றும் அழியாப் புகழ் மீட்டுவாய்,
திராவிடனின் உயிர் மூச்சாகா.


No comments:

Post a Comment