Saturday, March 5, 2016

வாழ்த்து

மயில் கூட்டம் அடை காக்க பூவொன்று மலர்ந்தது
இளம் தென்றல் அரவணைப்பில் நளினமாய் வளர்ந்தது
நட்சத்திரம் கூடி சென்று கலை அழகு சேர்த்ததே
வெண்ணிலவும் வெட்கப்பட பொற்சிலையாய் ஜொலித்தது
பூமியிலே நடமாடும் தேவதையாய் இருந்தது
இன்று "இரு பத்து ஜென்ம நாள்" கோலமாய் காணுதே
நிலம் கடல் ஆஹாயம் ஒன்றாக கூடியே
இன்னும் கோடி ஆண்டு பூத்து குலுங்க ஆனந்தமாய் வாழ்த்துதே!

No comments:

Post a Comment